அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி |
நாயை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. சிபிராஜ் நடித்து, தயாரித்த நாய்கள் ஜாக்கிரதை வெற்றி பெற்றது. தற்போது நாயை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் அன்புள்ள கில்லி.
புதுமுகம் ராமலிங்கம் ஶ்ரீநாத் எழுதி, இயக்கியுள்ளார். மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன் மற்றும் சாந்தினி தமிழரசன் , மைம் கோபி, ஆஷிக், நாஞ்சில் விஜயன், இளவரசு, பூ ராமு, இந்துமதி, ஶ்ரீரஞ்சனி மற்றும் பேபி கீர்த்திகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றிய இயக்குனர் ராமலிங்கம் ஸ்ரீநாத் கூறியதாவது: மனிதனின் உற்ற தோழனாக இருந்து வருகிறது நாய். அது சாதாரண மிருகம் மட்டுமல்ல, அது வீட்டின் பாதுகாவலன். அனைவர் வீடுகளிலும் நாய் ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருக்கும். அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள்.
உலகம் முழுக்க நாயை உறவாகவே கொண்டாடி வருகிறார்கள். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை சொல்லும் படமாக இருக்கும். நாயை வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இது இருக்கும். என்றார்.