'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிக்பாஸ் சீசன்-3 மூலம் பரபரப்பு வளையத்துக்குள் வந்த வனிதா விஜயகுமார், அதன்பின் கடந்த வருடம் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்த சமயத்தில், பீட்டர்பால் என்பவரை மூன்றாவது மறுமணம் செய்துகொண்டு மீண்டும் பரபரப்பை உருவாக்கினார்.. ஆனால் வழக்கம்போல் இந்தமுறையும் அவரது திருமணம் தோல்வியில் முடிய, அதை மறக்கும் விதமாக, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் ரம்யா கிருஷ்ணன் ஜட்ஜ் ஆக உள்ள பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் (பிக்பாஸ் தாத்தா) ஜோடியாக பங்கேற்று வந்தார் வனிதா. ஆனால் சமீபத்தில்; இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக இரண்டு பக்கத்துக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்தார் வனிதா.
அதில் அவர் முக்கியமாக சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்றே பலரும் கூறுகிறார்கள். குறிப்பாக வனிதாவின் பெர்பாமன்ஸ்க்கு ஒருமுறை, பத்துக்கு ஒரு மதிப்பெண் கொடுத்தாராம் ரம்யா. இது வனிதாவை ரொம்பவே அப்செட் ஆக்கியதால் தான், வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யாவிடம் கேட்டபோது, “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் 'நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என கூறியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.