பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இந்திய சினிமா உலகத்திற்கே யு-டியூப் வீடியோ சமூக வலைதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்த பாடல் 'ஒய் திஸ் கொலவெறி'. '3' படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் யு டியூபில் வெளியானது.
வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே இப்பாடல் வைரலாகி, இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இந்த அனிருத் என பலரும் கேட்க ஆரம்பித்தனர். தனுஷ் பாடலாசிரியராகவும், பாடகராகவும் ஒரே பாட்டிலேயே உச்சம் தொட்டார்.
அப்பாடல் தான் தமிழ் சினிமா பாடல்களில் யு டியூபில் முதலிடத்தில் நீடித்து வந்தது. ஆனால், தனுஷ் நடித்த மற்றொரு பாடலான 'ரவுடி பேபி' பாடல் அதை விடவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 'கொல வெறி' சாதனையை முறியடித்து எங்கோ சென்றுவிட்டது. தற்போது 1183 மில்லியன் சாதனைகளுடன் அப்பாடல் தான் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடலுக்கும் தற்போது போட்டி வந்துவிட்டது. தீ, அறிவு பாடிய தனிப்பாடலான 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் யூ டியூபில் வெளியான நான்கு மாதங்களிலேயே 280 மில்லியன் பார்வை சாதனையைக் கடந்துள்ளது.
284 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடல் சாதனையை முறியடிக்க 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு இன்னும் 4 மில்லியன் பார்வைகள்தான் தேவைப்படுகிறது. அதையும் சீக்கிரத்திலேயே இப்பாடல் பெற்றுவிடும்.