ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்திய சினிமா உலகத்திற்கே யு-டியூப் வீடியோ சமூக வலைதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்த பாடல் 'ஒய் திஸ் கொலவெறி'. '3' படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் யு டியூபில் வெளியானது.
வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே இப்பாடல் வைரலாகி, இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இந்த அனிருத் என பலரும் கேட்க ஆரம்பித்தனர். தனுஷ் பாடலாசிரியராகவும், பாடகராகவும் ஒரே பாட்டிலேயே உச்சம் தொட்டார்.
அப்பாடல் தான் தமிழ் சினிமா பாடல்களில் யு டியூபில் முதலிடத்தில் நீடித்து வந்தது. ஆனால், தனுஷ் நடித்த மற்றொரு பாடலான 'ரவுடி பேபி' பாடல் அதை விடவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 'கொல வெறி' சாதனையை முறியடித்து எங்கோ சென்றுவிட்டது. தற்போது 1183 மில்லியன் சாதனைகளுடன் அப்பாடல் தான் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடலுக்கும் தற்போது போட்டி வந்துவிட்டது. தீ, அறிவு பாடிய தனிப்பாடலான 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் யூ டியூபில் வெளியான நான்கு மாதங்களிலேயே 280 மில்லியன் பார்வை சாதனையைக் கடந்துள்ளது.
284 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடல் சாதனையை முறியடிக்க 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு இன்னும் 4 மில்லியன் பார்வைகள்தான் தேவைப்படுகிறது. அதையும் சீக்கிரத்திலேயே இப்பாடல் பெற்றுவிடும்.