ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

இந்திய சினிமா உலகத்திற்கே யு-டியூப் வீடியோ சமூக வலைதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்த பாடல் 'ஒய் திஸ் கொலவெறி'. '3' படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் யு டியூபில் வெளியானது.
வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே இப்பாடல் வைரலாகி, இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் இந்த அனிருத் என பலரும் கேட்க ஆரம்பித்தனர். தனுஷ் பாடலாசிரியராகவும், பாடகராகவும் ஒரே பாட்டிலேயே உச்சம் தொட்டார்.
அப்பாடல் தான் தமிழ் சினிமா பாடல்களில் யு டியூபில் முதலிடத்தில் நீடித்து வந்தது. ஆனால், தனுஷ் நடித்த மற்றொரு பாடலான 'ரவுடி பேபி' பாடல் அதை விடவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 'கொல வெறி' சாதனையை முறியடித்து எங்கோ சென்றுவிட்டது. தற்போது 1183 மில்லியன் சாதனைகளுடன் அப்பாடல் தான் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடலுக்கும் தற்போது போட்டி வந்துவிட்டது. தீ, அறிவு பாடிய தனிப்பாடலான 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் யூ டியூபில் வெளியான நான்கு மாதங்களிலேயே 280 மில்லியன் பார்வை சாதனையைக் கடந்துள்ளது.
284 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள 'கொல வெறி' பாடல் சாதனையை முறியடிக்க 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு இன்னும் 4 மில்லியன் பார்வைகள்தான் தேவைப்படுகிறது. அதையும் சீக்கிரத்திலேயே இப்பாடல் பெற்றுவிடும்.




