ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மத்திய அரசு ஒளிப்பதிவு வரைவு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக படங்கள் வெளிவந்த பிறகும் அதன் மீதான புகார்கள் வந்தால் படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்பும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குவது. இதற்கு சினிமாவில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. திரையுலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா டுவிட்டரில், ‛‛சட்டம் மக்களை காக்க வேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது'' என பதிவிட்டிருந்தார்.
இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள நடிகையும், பா.ஜ., பிரமுகருமான காயத்ரி ரகுராம் : ‛‛சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை. ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க, அதை தவறாகப் பயன்படுத்த முடியாது.
உதாரணமாக, நீங்கள் மோடிஜிக்கு எதிராக செல்வது என்ற பெயரில், நீங்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் எதிராக செல்கிறீர்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக. உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. பஞ்ச் டயலாக்கிற்கு பதிலாக உண்மைகளுடன் பேசுங்கள். இது திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது. உண்மை முக்கியமானது'' என பதிவிட்டுள்ளார்.
இதேப்போன்று கார்த்திக் சுப்பராஜூம் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதற்கு, ‛‛எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும், 4 பாடல்களும், 4, சென்டிமென்ட் காட்சிகளும், 2 மாஸ் ஓப்பனிங் காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள். வேறு எதுவும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்?'' என பதிவிட்டுள்ளார்.