துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் ஜெயம் படம் மூலமாக அறிமுகமாகி, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை சதா. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதற்கு முன்னதாக, அறிமுகமான காலகட்டத்தில் சதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பு இருந்ததால், நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வந்தார் அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது, ஆனால் சில சூழல் காரணமாக அவரால் அதை ஏற்க முடியாமல் போனது.
இது குறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சதா. சந்திரமுகியில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சதா.
அதேசமயம் சினிமா வட்டாரங்களில் முதலில் இவரை மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அழைத்ததாகவும் அதனால் இவர்தான் நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என கூறி மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அந்த சமயத்திலேயே சொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.