ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்த காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? | சிவகார்த்திகேயன் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள்: ரவிமோகன் வருத்தம் |

தமிழில் ஜெயம் படம் மூலமாக அறிமுகமாகி, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை சதா. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதற்கு முன்னதாக, அறிமுகமான காலகட்டத்தில் சதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பு இருந்ததால், நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வந்தார் அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது, ஆனால் சில சூழல் காரணமாக அவரால் அதை ஏற்க முடியாமல் போனது.
இது குறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சதா. சந்திரமுகியில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சதா.
அதேசமயம் சினிமா வட்டாரங்களில் முதலில் இவரை மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அழைத்ததாகவும் அதனால் இவர்தான் நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என கூறி மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அந்த சமயத்திலேயே சொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.