பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடிதான்', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், குழந்தையை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். அதற்கு ‛‛குழந்தை பெற்றுக் கொள்வது உங்களின் பார்ட்னர் மற்றும் உங்களுடைய முடிவுகளை பொறுத்தது'' என்று பதில் அளித்தார் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்க அவரும் அப்படியே செய்தார். அதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் செல்பியை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அந்த படம் வைரலாகி வருகிறது.