புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மாநகரம் படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக மாறியவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் ஓரளவு ரசிகர்கர்களையும், மினிமம் கியாரண்டி மார்க்கெட்டையும் பெற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அதாவது விஜய்யின் பிறந்தநாளன்று திடீரென விஜய் ரசிகர்களின் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகினார்..
காரணம் இதுதான்.. கடந்த வருடம் விஜய் பிறந்தநாளன்று அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து சொன்ன சந்தீப், “நான் அவரது மிகப்பெரிய ரசிகன்” என்றும் கூறியிருந்தார். ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கு முன் அதாவது விஜய்யின் சுறா படம் வெளியான சமயத்தில் “சுறா படம் பார்த்தேன்.. ஐதராபாத் வெயிலை விட இந்தப்படம் பெரிய டார்ச்சராக இந்தது. மூளை உருகி வெளியே வந்துவிட்டது” என்பது உள்ளிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்தி கிண்டலடித்து இருந்தார்.
இந்த இரண்டு டுவீட்டுகளையும் ஒன்றிணைத்து வெளியிட்ட ரசிகர் ஒருவர், 'எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ.” என விஜய்யை புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தான், விஜய் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானார் சந்தீப்.
ஆனாலும் இதை கவனித்த சந்தீப், “இதுகுறித்து நான் எந்தவிதத்திலும் வெட்கப்பட போவதில்லை. விஜய் படங்களை பார்த்து வளர்ந்தவன் தான் நான். இடையில் வழக்கமான சினிமா ரசிகனாக மாறி போயிருந்தேன். ஆனால் இந்த பத்து வருடங்களில் விஜய்யின் கடின உழைப்பு என்னை இம்ப்ரெஸ் செய்து, என்னை அவரது மிகப்பெரிய ரசிகன் ஆக்கிவிட்டது” என சமாளிப்பாக பதில் அளித்துள்ளார் சந்தீப் கிஷன்.