ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது காதல் பின்னணியில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசி வருகின்றன. அப்படி ஒரு ஓடிடி நிறுவனம் 500 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்தை கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரோ அதை நிராகரித்து விட்டார்
இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது தான் தனது முடிவு என்றும் அதுவரை நாங்கள் பொறுமையாக காத்திருக்க தயார் என்றும் கூறிவிட்டாராம் படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் பட்ஜெட் ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று அதிகமாகி விட்டது என்றாலும்கூட,. ஓடிடி டீலிங்கை மறு யோசனைக்கு இடமின்றி நிராகரித்து உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.