கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் |

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'லிகர்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தை ஓடிடியில் வெளியிட ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும், அது சம்பந்தமாக தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாகவும் மீம் ஒன்றுடன் செய்தி வெளியாகி இருந்தது.
அதைப் பகிர்ந்து, “ரொம்ப குறைவு, தியேட்டர்களில் இதைவிட அதிகம் செய்வேன்,” கிண்டலாக பதிலளித்திருந்தார்.
தெலுங்கில் தற்போது தயாராகி வரும் பல படங்கள் பான் - இந்தியா படங்களாக தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியிடும் வகையில் தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் 'லிகர்' படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியக் கூட இல்லை, அதற்குள் ஓடிடி வெளியீடு, 200 கோடி, தயாரிப்பாளர் பேச்சு வார்த்தை என யாரோ செய்தி வெளியிட்டுள்ளார்கள்.