விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'லிகர்'. இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தை ஓடிடியில் வெளியிட ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் தரத் தயாராக இருப்பதாகவும், அது சம்பந்தமாக தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாகவும் மீம் ஒன்றுடன் செய்தி வெளியாகி இருந்தது.
அதைப் பகிர்ந்து, “ரொம்ப குறைவு, தியேட்டர்களில் இதைவிட அதிகம் செய்வேன்,” கிண்டலாக பதிலளித்திருந்தார்.
தெலுங்கில் தற்போது தயாராகி வரும் பல படங்கள் பான் - இந்தியா படங்களாக தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியிடும் வகையில் தயாரித்து வருகிறார்கள். அந்த வகையில் 'லிகர்' படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியக் கூட இல்லை, அதற்குள் ஓடிடி வெளியீடு, 200 கோடி, தயாரிப்பாளர் பேச்சு வார்த்தை என யாரோ செய்தி வெளியிட்டுள்ளார்கள்.