பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமா ஹீரோக்கள் இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அல்லது தமிழ், தெலுங்கு இரண்டுக்குமான படங்களில் நடிக்கிறார்கள். விஜய் அடுத்து வம்சி இயக்கத்திலும், தனுஷ் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்கள். இருவருமே தெலுங்கில் முன்னணி இயக்குனர்கள்.
இதேபோல் தமிழ் இயக்குனர்களும் தெலுங்கை நோக்கி படையெடுக்கின்றனர். ஷங்கர் அடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கூட தெலுங்கில் ஒரு படம் இயக்க பேசி வருகிறார். லிங்குசாமி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தெலுங்கில் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க தமிழ் நடிகர்களான அருண் விஜய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதன் மூலம் படத்துக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பார்முலாவில் தான் தெலுங்கு ஹீரோவுக்கு தமிழில் இருந்து வில்லன்களை இறக்க இயக்குனர்கள் திட்டமிடுகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் தமிழில் இருந்து நாயகன் ஒருவரை வில்லனாக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.