லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழ் சினிமா ஹீரோக்கள் இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அல்லது தமிழ், தெலுங்கு இரண்டுக்குமான படங்களில் நடிக்கிறார்கள். விஜய் அடுத்து வம்சி இயக்கத்திலும், தனுஷ் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்கள். இருவருமே தெலுங்கில் முன்னணி இயக்குனர்கள்.
இதேபோல் தமிழ் இயக்குனர்களும் தெலுங்கை நோக்கி படையெடுக்கின்றனர். ஷங்கர் அடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கூட தெலுங்கில் ஒரு படம் இயக்க பேசி வருகிறார். லிங்குசாமி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தெலுங்கில் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க தமிழ் நடிகர்களான அருண் விஜய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதன் மூலம் படத்துக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பார்முலாவில் தான் தெலுங்கு ஹீரோவுக்கு தமிழில் இருந்து வில்லன்களை இறக்க இயக்குனர்கள் திட்டமிடுகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் தமிழில் இருந்து நாயகன் ஒருவரை வில்லனாக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.