புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தமிழ் சினிமா ஹீரோக்கள் இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அல்லது தமிழ், தெலுங்கு இரண்டுக்குமான படங்களில் நடிக்கிறார்கள். விஜய் அடுத்து வம்சி இயக்கத்திலும், தனுஷ் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்கள். இருவருமே தெலுங்கில் முன்னணி இயக்குனர்கள்.
இதேபோல் தமிழ் இயக்குனர்களும் தெலுங்கை நோக்கி படையெடுக்கின்றனர். ஷங்கர் அடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கூட தெலுங்கில் ஒரு படம் இயக்க பேசி வருகிறார். லிங்குசாமி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தெலுங்கில் பிரபலமான கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க தமிழ் நடிகர்களான அருண் விஜய் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதன் மூலம் படத்துக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பார்முலாவில் தான் தெலுங்கு ஹீரோவுக்கு தமிழில் இருந்து வில்லன்களை இறக்க இயக்குனர்கள் திட்டமிடுகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் தமிழில் இருந்து நாயகன் ஒருவரை வில்லனாக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.