ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. சில சின்னத்திரை தொடர் படப்பிடிப்புகள் மட்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இந்த நிலையில் 100 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இது நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
ஆனாலும் படப்பிடிப்புகள் எதுவும் நேற்று தொடங்கவில்லை. படப்பிடிப்புக்கு முந்தைய, பிந்தைய பணிகள் அதற்குரிய ஸ்டூடியோக்களில் ஊரடங்கு காலத்திலும் சிறிய அளவில் நடந்து கொண்டுதான் இருந்தது. நேற்று மூழு வீச்சுடன் தொடங்கியது.
தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர்கள் தயங்குவதாக தெரிகிறது. படப்பிடிப்பில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதோடு முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த படப்பிடிப்பும் நேற்று தொடங்கவில்லை.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருப்பதாவது: படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் தயார் நிலையில் இல்லாத காரணத்தால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கவில்லை, இன்னும் ஒரு சில நாளில் படப்பிடிப்புகள் தொடங்கும். சின்னத்திரை தொடர்கள் தங்கள் படப்பிடிப்பை தொடங்கி உள்ளன. என்றார்.