கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், இன்னும் சிலருக்கு வெளியில் செல்ல பயமாகத்தான் இருக்கிறது. ஒரு சில சினிமா பிரபலங்கள்தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்கள், சிலர் தயாராகி வருகிறார்கள்.
நடிகை ஆண்ட்ரியா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் கொரானோவிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என சிறப்பான பத்து ஆலோசனைகளையும் சொன்னார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து அவருக்கும் போரடித்துவிட்டது போலிருக்கிறது. நேற்று அசத்தலான காஸ்ட்யூம் ஒன்றை அணிந்து சில புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு, “டிரஸ் பண்ணியாச்சி, ஆனா, எங்க போறது,” எனக் கேட்டிருந்தார்.
ஜுலை மாதத்திலிருந்து தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் உள்ளது. அதுவரையிலும் ஆண்ட்ரியா வீட்டில் தான் அடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஐதராபாத்தில் அவருடைய படத்தின் படப்பிடிப்பை இப்போதே ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும்.
தற்போது தமிழில், “அரண்மனை 3, நோட் என்ட்ரி, வட்டம், மாளிகை, பிசாசு 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.