சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், இன்னும் சிலருக்கு வெளியில் செல்ல பயமாகத்தான் இருக்கிறது. ஒரு சில சினிமா பிரபலங்கள்தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்கள், சிலர் தயாராகி வருகிறார்கள்.
நடிகை ஆண்ட்ரியா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் கொரானோவிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது என சிறப்பான பத்து ஆலோசனைகளையும் சொன்னார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து அவருக்கும் போரடித்துவிட்டது போலிருக்கிறது. நேற்று அசத்தலான காஸ்ட்யூம் ஒன்றை அணிந்து சில புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு, “டிரஸ் பண்ணியாச்சி, ஆனா, எங்க போறது,” எனக் கேட்டிருந்தார்.
ஜுலை மாதத்திலிருந்து தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் உள்ளது. அதுவரையிலும் ஆண்ட்ரியா வீட்டில் தான் அடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஐதராபாத்தில் அவருடைய படத்தின் படப்பிடிப்பை இப்போதே ஆரம்பிக்கச் சொல்ல வேண்டும்.
தற்போது தமிழில், “அரண்மனை 3, நோட் என்ட்ரி, வட்டம், மாளிகை, பிசாசு 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.