புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனா இரண்டாவது அலை பரவிக் கொண்டிருந்தபோதும் ரஜினியின் அண்ணாத்த படத்தை ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாதுகாப்பான முறையில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினர். அந்த படத்தில் தனக்கான காட்சிகளில நடித்து முடித்து விட்டே சென்னை திரும்பினார் ரஜினி.
அதையடுத்து ஆந்திராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் சிரஞ்சீவி, ராஜ மவுலி, மகேஷ்பாபு, பிரபாஸ் என பலரது படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் அங்கு துவங்கி உள்ளன. தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் இங்குள்ள பல நடிகர்கள் ஐதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர். தற்போது விஷாலின் 31வது படத்தின் படப்பிடிப்பு அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதையடுத்து சூர்யா, கார்த்தி போன்ற தமிழ் நடிகர்களின் புதிய படங்களின் படப்பிடிப்புகளையும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சில ஹிந்தி, கன்னட படங்களின் படப்பிடிப்புகளும் கூட இந்த பிலிம் சிட்டியில் விரைவில் நடைபெற உள்ளதாம். ஆக, ராமோஜிராவ் பிலிம்சிட்டி ஹாட் சிட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.