அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

கொரோனா இரண்டாவது அலை பரவிக் கொண்டிருந்தபோதும் ரஜினியின் அண்ணாத்த படத்தை ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாதுகாப்பான முறையில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினர். அந்த படத்தில் தனக்கான காட்சிகளில நடித்து முடித்து விட்டே சென்னை திரும்பினார் ரஜினி.
அதையடுத்து ஆந்திராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் சிரஞ்சீவி, ராஜ மவுலி, மகேஷ்பாபு, பிரபாஸ் என பலரது படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் அங்கு துவங்கி உள்ளன. தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் இங்குள்ள பல நடிகர்கள் ஐதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர். தற்போது விஷாலின் 31வது படத்தின் படப்பிடிப்பு அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதையடுத்து சூர்யா, கார்த்தி போன்ற தமிழ் நடிகர்களின் புதிய படங்களின் படப்பிடிப்புகளையும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சில ஹிந்தி, கன்னட படங்களின் படப்பிடிப்புகளும் கூட இந்த பிலிம் சிட்டியில் விரைவில் நடைபெற உள்ளதாம். ஆக, ராமோஜிராவ் பிலிம்சிட்டி ஹாட் சிட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.