என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து, விஜய் சேதுபதியும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதில் இறுதி வரை நின்று வெற்றி பெறுபவரை வெற்றியாளராக அறிவிக்கும் சர்வைவர் எனும் நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் இதற்கான நிகழ்வு படமாக்கப்பட உள்ளது. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் சிலரிடம் பேசி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




