எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து, விஜய் சேதுபதியும் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதில் இறுதி வரை நின்று வெற்றி பெறுபவரை வெற்றியாளராக அறிவிக்கும் சர்வைவர் எனும் நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் இதற்கான நிகழ்வு படமாக்கப்பட உள்ளது. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் சிலரிடம் பேசி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.