பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமா உலகில் சில இரண்டாம் பாகப் படங்கள் சில பல சிக்கல்களால் சிக்கிக் கொண்டிருக்கிறது என நேற்று தான் செய்தி வெளியிட்டோம். அதில் ஒரு படத்திற்கான விடிவுகாலம் என்னவென்பதை அதன் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க லண்டனில் ஆரம்பமான படம் துப்பறிவாளன் 2. அங்கு ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் படத்தின் இயக்குனர் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். பெரும் சர்ச்சையான அந்த விவகாரம் அப்படியே முடங்கிப் போய் படமும் முடங்கி இருந்தது.
சமீபத்திய பேட்டியில் இப்படத்தை 2022ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் விஷால். முன்னர் சொன்னபடி படத்தை அவரே இயக்கப் போகிறாராம், இசையும் இளையராஜாதான் எனக் கூறியிருக்கிறார்.
லண்டனில் காலையில் படப்பிடிப்பை லேட்டாக ஆரம்பித்து ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே மிஷ்கின் எடுத்து தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சை அடங்கிப் போயிருந்த இந்த விவகாரம் விஷாலின் பேட்டியால் மீண்டும் சர்ச்சைகளை வரவக்கும் என்றே தெரிகிறது.