பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஆர்யாவுடன் இணைந்து நடித்து வந்த எனிமி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை அடுத்து தனது 31ஆவது படத்தின் படப்பிடிப்பை நேற்று முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியிருக்கிறார் விஷால். து.பா.சரவணன் இயக்கும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி நாயகியாக நடிக்க, விஷாலே தயாரிக்கிறார்.
அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஒரேகட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி ஜூலை இறுதிக்குள் படத்தை முடித்து விடவும் திட்டமிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொரோனா பிரச்னையால் தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்க அனுமதி அளிக்கப்படாத சூழலில் ஐதராபாத்தில் அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாக இதன் படப்பிடிப்பை அங்கு துவங்கி உள்ளார் விஷால்.