பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் தான் நடிகைகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அங்கெல்லாம் நடிகைகள் பெறும் சம்பளத்தை சாண்டல்வுட், மல்லுவுட் ஆகியவற்றில் உள்ள முன்னணி நடிகர்கள் கூட பெறுவதில்லை என்றும் சொல்வார்கள்.
கடந்த சில நாட்களாகவே சில முன்னணி பாலிவுட் நடிகைகள் புதிய படங்களுக்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் ஹீரோயினான கரீனா கபூர் ஹிந்தியில் உருவாக உள்ள 'சீதா' படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. அடுத்து 'தி பேமிலி மேன் 2' வெப்தொடரில் நடிக்க 3 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாகச் சொன்னார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க ஆலியா பட்டிற்கு நாளொன்றுக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்து தீபிகா படுகோனேவின் புதிய சம்பளம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தீபிகா கதாநாயகியாக நடிக்க 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுதான் இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிக சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
ஹீரோக்களுக்கு 100 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் போது ஒரு ஹீரோயினுக்கு 8 கோடி என்பதே அதிக சம்பளம் எனச் சொல்வது சரியா ?