இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் தான் நடிகைகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அங்கெல்லாம் நடிகைகள் பெறும் சம்பளத்தை சாண்டல்வுட், மல்லுவுட் ஆகியவற்றில் உள்ள முன்னணி நடிகர்கள் கூட பெறுவதில்லை என்றும் சொல்வார்கள்.
கடந்த சில நாட்களாகவே சில முன்னணி பாலிவுட் நடிகைகள் புதிய படங்களுக்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் ஹீரோயினான கரீனா கபூர் ஹிந்தியில் உருவாக உள்ள 'சீதா' படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. அடுத்து 'தி பேமிலி மேன் 2' வெப்தொடரில் நடிக்க 3 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாகச் சொன்னார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க ஆலியா பட்டிற்கு நாளொன்றுக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்து தீபிகா படுகோனேவின் புதிய சம்பளம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தீபிகா கதாநாயகியாக நடிக்க 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுதான் இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிக சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
ஹீரோக்களுக்கு 100 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் போது ஒரு ஹீரோயினுக்கு 8 கோடி என்பதே அதிக சம்பளம் எனச் சொல்வது சரியா ?