மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாகுபலி 2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் படப்பிடிப்பை ரத்து செய்தார். அதனால் அக்டோபரில் வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகிறது.
இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக ஒரு குறும்படத்தை இயக்கும் ஸ்கிரிப்ட் வேலைகளில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த குறும்படம் லாக்டவுன் நேரத்தில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் எந்தமாதிரியெல்லாம் உயிரையும் பணயம் வைத்து அவர்கள் ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் கதையாக உருவாகிறதாம். இதற்காக முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள சில காவலர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளாராம் ராஜமவுலி.