ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் | ''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல் | நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதா | உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் | கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி | ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து வரும் படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இப்படம் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில காட்சிகளை படமாக்கிவிட்டால் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். அதற்கு முன்னதாக மற்ற பணிகளை தற்போது செய்து வருகிறார்களாம்.
இதனிடையே, இப்படத்தின் அனைத்து விதமான உரிமைகளையும் சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள அமேசான் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் அந்த 400 கோடியில் அடங்கும் என்கிறார்கள்.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படத்தை எப்படி ஓடிடி தளத்தில் வெளியிடுவது என தயாரிப்பு நிறுவனமும் யோசித்து வருகிறதாம். எனவே, வரும் தசரா விடுமுறையில் தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தயாரிப்பாளர் தயாராகி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
ஜுலை மாதம் தெலுங்கு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள். அப்போது மக்கள் எப்படி வருகிறார்கள் என்பதைப் பொறுத்து 'ராதேஷ்யாம்' படத்தின் வெளியீட்டை முடிவு செய்யலாம் என்றும் தெரிகிறது.