தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா தொற்று இரண்டாவது அலை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. இருந்தாலும் சில பிரபலங்களின் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எதிர்பாராத சில மரணங்களால் பலரும் துயரம் அடைகிறார்கள்.
தனது தத்ரூபமான ஓவியங்களால் பலரது பாராட்டையும் பெற்றவர் பிரபல ஓவியர் இளையராஜா. கிராமத்து சூழலில் அவர் வரைந்த ஓவியங்களைக் கண்டு வியக்காதவர்கள ஒரு சிலரே. அவர் கொரானோ தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். “பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.