என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதும் சினிமா படப்பிடிப்புகள், டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் பின் தற்போது தான் முதல் தளர்வை நாளை முதல் அமல்படுத்த உள்ளார்கள்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பிளம்பிங், எலக்ட்ரிக்கல், மோட்டார் வாகன ரிப்பேர் கடைகள் ஆகியவற்றைத் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி அடைந்தாலும் அத்தொழிலை நேரடியாகவும், மறைமுகவும் நம்பியுள்ள அனைவரின் வாழ்வாதாரமும் மீண்டும் மீட்டெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல தினசரித் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்திற்கான உழைப்பை நாளை முதல் தொடங்க உள்ளனர்.
அது போல சினிமா, டிவி ஆகியவற்றில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சினிமாவை நம்பி தான் தியேட்டர்களும் இருக்கின்றன. அவற்றைச் சார்ந்த பல இணை, துணை தொழில்களும் உள்ளன. கடந்த வருட கொரோனா அலையின் போதே தளர்வுகள் அறிவித்தபின் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அடுத்த தளர்வின் போது சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கான அனுமதி கிடைத்தால் அது அத்துறையினருக்கு பேருதவியாக இருக்கும் என எண்ணுகின்றனர். பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அது போலவே தடுப்பூசி உள்ளிட்ட சில வரைமுறை, கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினரும், டிவி உலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.