பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வருகிறது. இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, ராமராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார்.
ராஜமவுலியின் பட கதை உருவாக்கத்தில் எப்போதும் பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “ஆர்ஆர்ஆர் படத்தின் ஆக்சன் காட்சிகளை பார்த்தபோது என்னையறியாமல் கண்ணீர் வந்தது. மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆக்சன் காட்சிகளை தியேட்டர்களில் பார்க்கும் ரசிகர்களுக்கும் இதேபோன்று வித்தியாசமான உணர்வு ஏற்படும்” என்று கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.