இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே |

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வருகிறது. இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, ராமராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார்.
ராஜமவுலியின் பட கதை உருவாக்கத்தில் எப்போதும் பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “ஆர்ஆர்ஆர் படத்தின் ஆக்சன் காட்சிகளை பார்த்தபோது என்னையறியாமல் கண்ணீர் வந்தது. மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆக்சன் காட்சிகளை தியேட்டர்களில் பார்க்கும் ரசிகர்களுக்கும் இதேபோன்று வித்தியாசமான உணர்வு ஏற்படும்” என்று கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.




