புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியா ஹெலனுக்கு அதன்பிறகு சரியான படங்கள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகி ஓவியா ஆர்மியெல்லாம் தொடங்கினார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சினிமாவில் அவர் டாப்பிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதையடுத்து களவாணி 2 படம் மட்டுமே அவர் நடித்து வெளியே வந்தது. அந்த படமும் ஓடவில்லை. ஆனபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்து சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கிறார். இந்தநிலையில், தற்போது தனது டுவிட்டரில் மீடூ குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், நேர்மையை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். மீடூ குறித்து வெளியில் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்பது எனக்கு புரிகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆனால் எந்த விசயத்தை மனதில் கொண்டு இப்படியொரு டுவீட்டை ஓவியா ஹெலன் தற்போது பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.