ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
பெங்களூரை சேர்ந்தவர் கவிதா கவுடா. தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு நீலி, மகராசி உள்பட பல சீரியல்களில் நடித்தார். கன்னடத்தில் ஒளிபரப்பான லட்சுமி பிரம்மா என்ற தொடரின் மூலம் அங்கு பிரபலமான நடிகை ஆனார். ஸ்ரீனிவாசா கல்யாணம், பர்ஸ்ட் லவ் உள்பட பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கடைசியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனாட்சியாக நடித்தார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது கன்னடத்தில் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடன் பல சீரியல்களில் இணைந்து நடித்து வந்த சந்தன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. தற்போது இருவருக்கும் பெங்களூருவில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை கவிதா கவுடா வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.