தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு. தாமரைக்கு அடுத்து அதிக பாடல்களை எழுதியவர் தேன்மொழி தாஸ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கண்களால் கைது செய், அடுத்த சாட்டை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியவர்.
இசையில்லாத இலையில்லை, அநாதி காலம், ஒளியறியாக் காட்டுக்குள், நிராசைகளின் ஆதித்தாய் , காயா, வல்லபி, உள்ளிட்ட பல கவிதை நூல்களை எழுதியிருக்கிறார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேன்மொழி தாஸ் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சையில் உள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள இயக்குனர் களஞ்சியம், அவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டரில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.