பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இந்தியர்களுக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என்று பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கும் வகையில் டில்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தனது டுவிட்டரில் அரஸ்ட் மீடூ - அதாவது என்னையும் கைது செய்யுங்கள் என்று ரகுல்காந்தி டுவீட் செய்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஓவியா ஹெலனும் இந்த கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில், ‛‛இது ஜனநாயகமா? என்னையும் கைது செய்யுங்கள் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி சென்னை வந்தபோது ஒருமுறை கோபேக் மோடி என்று டுவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார் ஓவியா ஹெலன் என்பது குறிப்பிடத்தக்கது.