ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாளத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில், முதன்முதலாக நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண், தனது தந்தை சிரஞ்சீவிக்காக கைப்பற்றினார். ஆரம்பத்தில் சாஹோ பட இயக்குனர் சுஜீத் தான், இதன் ரீமேக்கை இயக்குவதாக சொல்லப்பட்டது. அதன்பின் இயக்குனர் வி.வி.விநாயக் பெயர் அடிபட்டது. ஆனால் இவர்கள் லூசிபர் படத்தின் கதையை தெலுங்கிற்கு ஏற்றமாதிரி மாற்றி, சிரஞ்சீவியை கவர தவறிவிட்டார்கள்.
அதன்பின்னர் தான் ரீமேக் படங்களை அந்தந்த மொழிக்கு ஏற்ப பக்காவாக இயக்குபவர் என பெயரெடுத்த இயக்குனர் மோகன் ராஜா, லூசிபர் ரீமேக்கை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவரும் இந்தப்படத்தில் நீடிப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் லூசிபர் படத்தை தெலுங்கிற்கு ஏற்றபடி, மாற்றும்படி சிரஞ்சீவி கூறியதை, மோகன்ராஜாவால் அவரது திருப்திக்கு ஏற்ப மாற்ற முடியவில்லையாம். அப்படி அவர் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்காததால், படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வருகிறாராம் சிரஞ்சீவி.