துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன் பிர்ஷாடா. தனுஷுடன் இணைந்து பட்டாஸ் என்கிற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தமிழ் திரையுலகம் தனக்கு கைகொடுக்கவில்லை என்பதால், தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வரும் மெஹ்ரீன், அங்கே வெங்கடேஷுக்கு ஜோடியாக எப்-3 என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் மெஹ்ரீனுக்கும் ஜெய்ப்பூர் மாநில காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் பாவ்யா பிஷ்னோஷ் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாவ்யாவின் காதலை தான் எப்போது எந்தவிதமாக ஏற்றுகொண்டேன் என்பது குறித்து தற்போது மெஹ்ரீன் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாவ்யா பிஷ்னோஷின் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக அந்தமான் சென்றார் மெஹ்ரீன். அப்போது கடலில் ஸ்கூபா டைவிங் அடிக்க ஆசைப்பட்டு கடலில் குதித்துள்ளார் மெஹ்ரீன். அதற்கு முன்னதாகவே தனது காதலை சொல்லும் ஏற்பாட்டுடன் தயாராக வந்திருந்த பாவ்யாவும் மெஹ்ரீனை தொடர்ந்து கடலில் குதித்துள்ளார்.
அங்கு தண்ணீருக்கு அடியில் மண்டியிட்டபடி 'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று எழுதப்பட்ட பதாகையை மெஹ்ரீனிடம் காட்ட சந்தோஷத்தில் அதிர்ந்துபோன மெஹ்ரீன் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். உடனே தண்ணீருக்குள்ளேயே மெஹ்ரீனின் விரலில் மோதிரம் அணிவித்து தனது காதலை உறுதி செய்தாராம் பாவ்யா பிஷ்னோஷ்.