மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் விஷ்ணு விஷால் தற்போதுதான் இரண்டாம் கட்ட ஹீரோக்களில் முக்கியமான இடத்தை பிடித்து வளர்ந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தவர், பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் விழுந்தார். சமீபத்தில் தனது காதலையும் திருமண அறிவிப்பையும் முறைப்படி வெளியிட்ட அவர், ஏப்-22 அன்று ஜூவாலாவை திருமணம் செய்து கொண்டார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வு கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு விருந்தினர்களுடன் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. அடுத்ததாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை விஷ்ணு விஷால் நடத்துவாரா என்கிற கேள்வி பலரிடம் எழுந்தது. இந்தநிலையில் ஐதராபாத்தில் தனது திருமண நிகழ்வையும் நேற்று நடத்தி முடித்துவிட்டார் விஷ்ணு விஷால். இந்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.