ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
நடிகர் விஷ்ணு விஷால் தற்போதுதான் இரண்டாம் கட்ட ஹீரோக்களில் முக்கியமான இடத்தை பிடித்து வளர்ந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தவர், பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் விழுந்தார். சமீபத்தில் தனது காதலையும் திருமண அறிவிப்பையும் முறைப்படி வெளியிட்ட அவர், ஏப்-22 அன்று ஜூவாலாவை திருமணம் செய்து கொண்டார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வு கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு விருந்தினர்களுடன் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. அடுத்ததாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை விஷ்ணு விஷால் நடத்துவாரா என்கிற கேள்வி பலரிடம் எழுந்தது. இந்தநிலையில் ஐதராபாத்தில் தனது திருமண நிகழ்வையும் நேற்று நடத்தி முடித்துவிட்டார் விஷ்ணு விஷால். இந்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.