நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் |
கொரோனா காலத்தில் சில சினிமா நடிகைகள் அவர்களது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது சரியா என்பது குறித்து நேற்றுத்தான் ஒரு செய்தி வெளியிட்டோம். அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன், நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றவர்களது உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்றும் கூறியதாக ஒரு மேற்கோளும் இருந்தது.
இந்நிலையில் இன்று ஸ்ருதிஹாசன் சில எரோட்டிக் ஆன புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். மற்றவர்களாவது கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு நிறுத்திக் கொண்டார்கள்.
ஆனால், ஸ்ருதிஹாசன் ஒரு படி மேலே போய் ஏடாகூடமான எக்ஸ்பிரஷன்களுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் என்ன மாதிரியான ஒரு இக்கட்டான சூழல் நிலவுகிறது, இப்போது எப்படியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற சிறிய பொறுப்புணர்வு கூட இல்லாமல் இப்படி புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் தவிர்க்க மாட்டார்களோ என்ற சாமானிய ரசிகனின் குரல் அவர்கள் காதுகளில் விழுமா ?.