பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்திருக்கிறது. நிகழ்ச்சியில் இருக்கும் பிரச்சினைகள், சண்டைகள் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்த விஷயங்களாக அமைந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில பெண் போட்டியாளர்களின் கிளாமரான ஆடை, மற்றும் சில அத்து மீறல்கள் அந்த நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்படுபவையாகவும் இருந்துள்ளன.
இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் பிரம்மாண்டமான வீடு போன்ற அரங்கில் சிகரெட் பிடிப்பவர்களுக்காக ஒரு சிறிய கூண்டு போன்று அமைக்கப்பட்ட தனி பகுதி ஒன்று உண்டு. முதல் இரண்டு சீசன்களில் அந்தப் பகுதியை அடிக்கடி காட்டுவார்கள். ஆனால், கடந்த சீசனில் அந்தப் பகுதிக்குள் நடந்த உரையாடல்களைக் காட்டுவதைத் தவிர்த்துவிட்டார்கள்.
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் ஆகியவை வரும் போது எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறும். டிவிக்களில் பெரும்பாலும் அப்படியான காட்சிகள் டிவி தொடர்களிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் கூட இடம் பெறாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிகரெட் பிடிப்பவர்களை ஆதரிக்கும் விதத்தில் அவர்களுக்கென ஒரு தனி பகுதியை ஒதுக்குவது விமர்சனத்துக்குரிய ஒன்றாகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களில் சிலர் சிகரெட் பிடிக்கம் பழக்கம் கொண்டவர்கள் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால், இதுவரை சிகரெட் பிடிக்காதே ஒரு பெண் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
அது பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாவது : பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம் பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள்.
அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, "தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்கம் போயி.. " என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.
நான் "ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.. feel free" என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் "Soooooory.." என்று நெளிந்தாள்.
"எதுக்கு?" என்றேன்.
"உங்களுக்கு ஷாக்தானே?"
"அதிர்ச்சி இல்ல.. ஆனால் ஆச்சர்யமாக உள்ளது. நீங்கள் புகைப்பது தெரியாது" என்றேன்.
"எல்லாம் இந்த பிக்பாஸ்-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா?" என்றாள்.
"அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டேன்.
"ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்"
"இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?"
"நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது" என்றாள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஜுன் மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. வரும் புதிய சீசனிலாவது சிகரெட் பிடிப்பதற்கான தனி அறை பகுதியை நீக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
கோடை காலத்தில் நிகழ்ச்சி நடந்த போது நீச்சல் குளத்திற்குள் தண்ணீர் விட வேண்டாமென யோசித்த கமல்ஹாசன், இந்த சிகரெட் பிடிக்கும் பகுதியும் வேண்டாமென யோசிப்பாரா ?.