பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மறைந்த நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்த அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்றது அவரது லட்சியமாக இருந்தது. தற்போது விவேக் மறைந்து விட்ட நிலையில் காமெடி நடிகர் தாமு, கலாம் விவேக் என்ற அமைப்பை தொடங்கி இருப்பதாகவும், இது விவேக்கின் கிரீன் கலாம் அமைப்புக்கு போட்டியானது என்றும் தகவல்கள் வெளியானது.
இதுறித்து தாமு கூறியிருப்பதாவது: விவேக்கின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விவேக் பத்தாண்டுகளுக்கு மேலாக செய்து வந்த மரம் நடும் பணியை பலரும் செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதுவே விவேக்கின் வெற்றிதான்.
விவேக் பல்லாண்டுகளாக எனக்கு நண்பர். அவர் தொடங்கியிருக்கும் அமைப்புக்கு எதிராக நான் கலாம் விவேக் என்கிற பெயரில் அமைப்பு தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நான் அப்படி சொல்லவில்லை. நான் போகும் இடங்களில் நடும் மரக்கன்றுகளுக்கு கலாம் விவேக் என்று பெயர் வைக்கப் போவதாகத்தான் சொன்னேன். அமைப்பு தொடங்கப்போவதாக சொல்லவில்லை.
விவேக் தொடங்கியிருக்கும் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் என்னை அழைத்தால் நான் கலந்து கொள்வேன். எனது நண்பனின் அமைப்புக்கு ஆதரவாக இருப்பேன். என்கிறார் தாமு.