லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் மன்சூரலிகான் அவ்வப்போது எதையாவது செய்து தன்னை மீடியாக்களின் பக்கம் திருப்பிக் கொள்வார். அந்த வரிசையில் சமீபத்தில் நடிகர் விவேக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் பிரச்சினை ஏற்பட்டதாக பேட்டி அளித்தார். அதோடு கொரோனா தடுப்பூசிகள் போலியானது என்றும் சொன்னார்.
கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் மன்சூரலிகான் மீது மாநகராட்சி ஆணையர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மன்சூரலிகான் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன்சூரலிகான் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இதை தொடர்ந்து அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படத்தி வரும் மன்சூரலிகானுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் மன்சூரலிகான் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.