‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மறைந்த நடிகர் விவேக்கிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நடிகர் விவேக்கின் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் காலையில் இருந்து இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனது அழிந்துவிட்டது. காரணம் நடிகர் விவேக் என் மீது மிகுந்த மரியாதையும், அளவற்ற அன்பும், அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே அவர் எனது ரசிகராக இருந்துள்ளார். பின்னால் அபிமானியாக மாறி, பின்னாளில் பக்தராக மாறக்கூடிய அளவுக்கு என்னை நேசித்துள்ளார். சமீபத்தில் கூட என்னை வந்து பார்த்துவிட்டு சென்றார். அவர் என்னென்ன பண்றார் என்பதை என்னிடம் சொல்வார். நானும் அவரை ஊக்கப்படுத்தி அவருக்கு உறுதுணையாக இருந்தேன். எனக்கு தெரிந்த யுக்திகளை கூறுவேன்.
சமீபத்தில் கூட என்னை ஸ்டுடியோவில் வந்து பார்த்துவிட்டு சில வேலைகளுக்காக என்னிடம் அனுமதி வாங்கி சென்றார். அவரின் அன்பையும், அபிமானத்தையும் இன்னொரு ரசிகனிடம் நான் பார்க்க முடியுமா என தெரியவில்லை. எல்லோரும் அவரின் மறைவில் துக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுக்க முடியாது. அதேப்போன்று என் துக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க முடியாது. அவரவர் துக்கம் அவரவருக்கு தான். நடிகர் விவேக்கின் குடும்பமே என் மீது பாசம் வைத்திருந்தது. அவரின் மறைவு எல்லோருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியது போன்று அவரது குடும்பத்தினருக்கும் அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த துக்கத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும் என்றும், விவேக்கின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன். விவேக்கின் குடும்பத்திற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.




