பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார். இதற்கு முன்பு தமிழில் 'அமரகாவியம், ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களையும், மலையாளத்தில் சில படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ளார். அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் 'ரெண்டகம்' என்றும் மலையாளத்தில் 'ஒட்டு' என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இப்படங்களின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய நடிகர்கள் பலரும் சொந்தப் படத் தயாரிப்பில் அதிகமாகவே ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள். சிலர் மட்டுமே தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆர்யா படம் தயாரிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.