புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார். இதற்கு முன்பு தமிழில் 'அமரகாவியம், ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களையும், மலையாளத்தில் சில படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ளார். அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் 'ரெண்டகம்' என்றும் மலையாளத்தில் 'ஒட்டு' என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இப்படங்களின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய நடிகர்கள் பலரும் சொந்தப் படத் தயாரிப்பில் அதிகமாகவே ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள். சிலர் மட்டுமே தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆர்யா படம் தயாரிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.