பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நயன சாய். கன்னடத்தில் ஒம்பதானே ஆடுபுதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்போது அவர் தமிழுக்கு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது தாய்மொழி தமிழ். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றேன். இப்போது தமிழ் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேல்முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதில் தேவயானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது.
அடுத்து அறிமுக இயக்குனர் சாம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதில் நான் திருநெல்வேலி பெண்ணாக நடிக்கிறேன். அதற்காக இப்போது பயிற்சி பெற்று வருகிறேன். அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனை தயாரிப்பு தரப்பில் இருந்து முறைப்படி அறிவிப்பார்கள். இது தவிர ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். என்றார்.