தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து பெரிய வெற்றியை கொடுத்து புதிய டிரண்டை உருவாக்கிய நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட். இதன் உரிமையாளராக தயாரிப்பாளர் சி.வி.குமார் இருக்கிறார். அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, சரபம், இன்று நேற்று நாளை என தொடர் வெற்றிகளை கொடுத்த நிறுவனம். தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராகி மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தமிழில் பிரபலமான 3 நாவல்களை படமாக்குகிறது. பிரபல எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஆபரேஷன் நோவா, நான் ரம்யாவாக இருக்கிறேன், வேங்கை நங்கூரத்தின் ஜின் குறிப்புகள் ஆகிய நாவல்களை படமாக்கும் உரிமத்தை பெற்றுள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.