விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? |
சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து பெரிய வெற்றியை கொடுத்து புதிய டிரண்டை உருவாக்கிய நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட். இதன் உரிமையாளராக தயாரிப்பாளர் சி.வி.குமார் இருக்கிறார். அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, சரபம், இன்று நேற்று நாளை என தொடர் வெற்றிகளை கொடுத்த நிறுவனம். தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராகி மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தமிழில் பிரபலமான 3 நாவல்களை படமாக்குகிறது. பிரபல எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஆபரேஷன் நோவா, நான் ரம்யாவாக இருக்கிறேன், வேங்கை நங்கூரத்தின் ஜின் குறிப்புகள் ஆகிய நாவல்களை படமாக்கும் உரிமத்தை பெற்றுள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.