மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ், ‛கற்கண்டு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நிர்மல் இயக்கும் வெள்ளகுச்சி என்ற படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : வில்லனாக நடிக்க எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. கதையின் களமும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் எனக்கு பிடித்திருந்தால் நடிக்க சம்மதித்தேன். அபூர்வ சகோதார்கள் உள்ளிட்ட பல படங்களில் தாத்தா வில்லனாக நடித்திருக்கிறார். அப்பாவும் வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் நானும் தயக்கம் இன்றி வில்லன் கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.