ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சில தினங்களுக்கு முன் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‛‛எனக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்டும் கனவு இருந்தது. நானும் கஷ்டப்பட்டு கட்டினேன். அங்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்னு பார்த்தால் ஒரு பிரச்னை. நம்ம என்ன கோழையா, எப்படி அமைதியா இருக்க முடியும். இப்போது இந்த பிரச்னை பெரிதாகிவிட்டது, அதான் உங்களிடம் பேசுகிறேன்'' என கூறியிருந்தார்.
இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் என்ன பிரச்னை என்பது போன்று ஒரு தோற்றம் உருவானது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் மதில். இதில் இவருடன் மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலே கே.எஸ்.ரவிக்குமார் வீடியோவில் கூறிய விஷயம் தான் இந்தபடத்தின் கதை. இந்தப்படம் இப்போது நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்., 14ல் வெளியாகிறது. இதற்கான புரொமோஷனை தான் இப்படி வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.