காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத், சந்தியாக நடித்த காதல் படத்தில் சினிமா வாய்ப்பு தேடும் இளைஞராக நடித்திருந்தவர் பல்லு பாபு. அந்த படத்தின் கேரக்டர் பெயரான விருச்சிககாந்த் என்பதையே தனது பெயராக வைத்துக் கொண்டார்.
அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமா வாய்ப்புகள் இன்றி மிகவும் சிரமப்பட்டார். உறவினர்களால் கைவிடப்பட்ட விருச்சிககாந்த் வடபழனி முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் செய்தி வெளியாகி சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தார்கள்.
அதன்பிறகு கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பும் இல்லாமல், சினிமா வாய்ப்பும் இல்லாமல் மீண்டும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இரவு நேரங்களில் பிளாட்பாரத்திலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவிலும் படுத்து உறங்கி உள்ளார். இந்த நிலையில நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் படுத்தவர் அப்படியே மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.