லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக ‛அசுரன் படமும், அதில் நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. தனுஷிற்கு இது இரண்டாவது தேசிய விருதாகும். அதுவும் ஏற்கனவே தனக்கு ‛ஆடுகளம் படம் மூலம் தேசிய விருது பெற்று தந்த வெற்றிமாறன் மூலமே ‛அசுரன் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
அதில், ‛‛காலையில் எழுந்ததுமே அசுரன் படத்திற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். ஒரு தேசிய விருது பெறுவது என்பதே கனவு. ஆனால் இரண்டு விருதுகள் வென்றிருப்பது ஆசீர்வாதமே. இந்தளவுக்கு நான் வருவேன் என கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்த தருணத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என் குருவான அண்ணன் மற்றும் இந்த சிவசாமியை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.