சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக ‛அசுரன் படமும், அதில் நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. தனுஷிற்கு இது இரண்டாவது தேசிய விருதாகும். அதுவும் ஏற்கனவே தனக்கு ‛ஆடுகளம் படம் மூலம் தேசிய விருது பெற்று தந்த வெற்றிமாறன் மூலமே ‛அசுரன் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
அதில், ‛‛காலையில் எழுந்ததுமே அசுரன் படத்திற்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். ஒரு தேசிய விருது பெறுவது என்பதே கனவு. ஆனால் இரண்டு விருதுகள் வென்றிருப்பது ஆசீர்வாதமே. இந்தளவுக்கு நான் வருவேன் என கற்பனை செய்து பார்க்கவில்லை. இந்த தருணத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என் குருவான அண்ணன் மற்றும் இந்த சிவசாமியை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.





