பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் |
'பாகுபலி' படங்களின் வெற்றி மூலம் பான்-இந்தியா நடிகராக மாறியவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அப்படங்களுக்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் மற்ற மொழிகளில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் வெற்றி பெற்றது.
பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'ராதே ஷ்யாம்'. அதற்கடுத்து அவர் நடிக்கும்'ஆதி புருஷ், சலார், நாக் அஸ்வின் இயக்கும் படம்' என அடுத்தடுத்த படங்களும் பான்-இந்தியா படங்களாகவே தயாராகி வருகின்றன.
ஒரு படத்திற்காக பிரபாஸ் வாங்கும் சம்பளம் 100 கோடியைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். மேலும், சில படங்களுக்கு அவருக்கு லாபத்திலும் பங்கு தரும்படி ஒப்பந்தம் இருக்கிறது என்கிறார்கள்.
தொடர்ச்சியாக மூன்று படங்களிலும் மாறி மாறி நடிக்க வேண்டும், அவற்றின் பிரமோஷன்களுக்குச் சுற்ற வேண்டும் என்பதால் மும்பையில் விலை உயர்ந்த அபார்ட்மென்ட் ஒன்றை கடற்கரை பகுதியில் வாங்க முடிவெடுத்துள்ளாராம் பிரபாஸ். அதற்கான தேடுதல் வேட்டையும் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்கள் சிலர்தான். தற்போது பாலிவுட் நடிகர்களுக்கும் போட்டி தரும் அளவிற்கு பிரபாஸ் வளர்ந்துவிட்டார் என்பதில் தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.