ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ஜெயம்ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் படங்களில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் தமிழில் நிதி அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். குறிப்பாக, முன்பு குஷ்புவிற்கு கோயில் கட்டி பூஜை நடத்தியது போன்று இப்போது சென்னையில் உள்ள ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு சிலை வடித்து அதற்கு பாலாபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ள நிதி அகர்வால், இதை ரசிகர்கள் தனக்கு கொடுத்த காதலர் தின பரிசாக நினைப்பதாகவும், தமிழக ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.