பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இசை அமைப்பாளர்கள் ஹீரோவாகும் காலம் இது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஆப் தமிழா ஆதி, உள்ளிட்ட சிலர் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் பாலாஜி விது தற்போது ஹீரோவாகியிருக்கிறார்.
இவர் தமிழில் இன்பா, சூரன், மஸ்து மஜா மாடி(கன்னடம்) உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து தமிழில் வெளியான த்ரிஷா இல்லைனா நயன்தாரா கன்னடா ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தற்போது கதையின் நாயகனாக தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.
இதுகுறித்து பாலாஜி விது கூறியதாவது: நான் நடிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், இந்த கதையை ரங்கா புவனேஷ்வர் என்னிடம் கூறினார். கதையை கேட்கும்போதே இந்தப்படத்தில் தான் அறிமுகம் ஆகணும் என முடிவு செய்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்து இதில் நடித்தேன். திரில்லரும் காதலும் நிறைந்த கதை இது. என்றார்.