திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் ஹரி தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வருகிறார். சூர்யா நடிப்பில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 என வரிசையாக இயக்கினார். அதேபோல் விக்ரம் நடிப்பில் சாமி, சாமி-2 படங்களை இயக்கினார். இந்த படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான போலீஸ் கதைகள் தான் என்றாலும், திரைக்கதையின் வேகத்தில் முந்தைய சாயல்களை வெளியில் தெரியாத அளவுக்கு செய்து விடுவார் ஹரி.
ஆனபோதும் சிங்கம் -3, சாமி -2 படங்கள் எதிர்பார்த்த படி வெற்றி பெறவில்லை. அதையடுத்து அருவா படத்தை சூர்யாவை வைத்து இயக்குவதாக கூறி வந்த ஹரி, பின்னர் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக சொன்னார். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே இல்லாமல் அவரது மைத்துனர் அருண் விஜய் அந்த படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அருவா படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இதற்கு முன்பு ஹரி இயக்கிய சேவல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்படத்தில் இணைகிறார்.