பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
இயக்குனர் ஹரி தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வருகிறார். சூர்யா நடிப்பில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 என வரிசையாக இயக்கினார். அதேபோல் விக்ரம் நடிப்பில் சாமி, சாமி-2 படங்களை இயக்கினார். இந்த படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான போலீஸ் கதைகள் தான் என்றாலும், திரைக்கதையின் வேகத்தில் முந்தைய சாயல்களை வெளியில் தெரியாத அளவுக்கு செய்து விடுவார் ஹரி.
ஆனபோதும் சிங்கம் -3, சாமி -2 படங்கள் எதிர்பார்த்த படி வெற்றி பெறவில்லை. அதையடுத்து அருவா படத்தை சூர்யாவை வைத்து இயக்குவதாக கூறி வந்த ஹரி, பின்னர் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக சொன்னார். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே இல்லாமல் அவரது மைத்துனர் அருண் விஜய் அந்த படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அருவா படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இதற்கு முன்பு ஹரி இயக்கிய சேவல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்படத்தில் இணைகிறார்.