நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஆந்திராவில் ஐதராபாத் போலீஸில் ஒரு சிறப்பு பிரிவாக, கடந்த ஒரு வருடமாக மகளிர் போலீஸ் குழு ஒன்று இயங்கி வருகிறது.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து என தெரிய வந்தால், அடுத்த சில நிமிடங்களில் விரைந்து சென்று அவர்களை பாதுகாக்கும் பணியை செய்து வருகின்றனர் இந்த சிறப்பு குழுவில் உள்ள பெண் காவலர்கள். குறிப்பாக இவர்கள் மருத்துவ பயிற்சியும் பெற்றுள்ளனர். அந்தவகையில் கடந்த ஒரு வருடத்தில் பல பெண்களை, பல்வேறு விதமான உயிராபத்து பிரச்சனைகளில் இருந்து இவர்கள் மீட்டுள்ளனர்,
இந்த சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி, இதில் பணியாற்றும் பெண் காவலர்களை கவுரப்படுத்தும் விதமாக நேற்று போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண் காவலர்களை பாராட்டி கவுரவித்தார் நடிகை அனுஷ்கா. இந்த வருடத்தில் அனுஷ்கா கலந்து கொள்ளும் முதல் நிகழ்வும் இதுதான்.. .
இதுபற்றி அனுஷ்கா கூறும்போது, “சினிமா நடிகர்களான நாங்கள் நட்சத்திரங்களாக உருவகப்படுத்தப்படுகிறோம்.. ஆனால் காவல்துறையில் உள்ள ஒவ்வொருவருமே நிஜமான நட்சத்திரங்கள் தான். உங்கள் முயற்சி, கடின உழைப்பு மற்றும் தியாகத்தால் தான், நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம்.. இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதையும் நிஜ நட்சத்திரங்களை சந்தித்தததையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன்” என கூறியுள்ளார்.