பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இந்திய அளவில் முன்னேறிவிட்ட நாயகனாக இருக்கிறார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து 'சலார், ஆதி புருஷ், நாக் அஷ்வின் இயக்கும் படம்' என தொடர்ந்து நடிக்க உள்ளார்.
இதில் 'சலார்' படத்தை 'கேஜிஎப்' பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார். கடந்த வாரம் தான் இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் நாயகியாக நடிக்க வைக்க நினைத்திருந்தார்களாம். ஆனால், தற்போது அந்த வாய்ப்பை தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் கைப்பற்றி விட்டதாகச் சொல்கிறார்கள்.
சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'கிராக்' படம் ஸ்ருதிஹாசனக்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டது. மேலும், தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் புகழ் பெற்ற நடிகையாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். எனவே அவரையே நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இணையும் படமாக இந்தப் படம் இருக்கும்.