துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இந்திய அளவில் முன்னேறிவிட்ட நாயகனாக இருக்கிறார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து 'சலார், ஆதி புருஷ், நாக் அஷ்வின் இயக்கும் படம்' என தொடர்ந்து நடிக்க உள்ளார்.
இதில் 'சலார்' படத்தை 'கேஜிஎப்' பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார். கடந்த வாரம் தான் இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் நாயகியாக நடிக்க வைக்க நினைத்திருந்தார்களாம். ஆனால், தற்போது அந்த வாய்ப்பை தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் கைப்பற்றி விட்டதாகச் சொல்கிறார்கள்.
சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'கிராக்' படம் ஸ்ருதிஹாசனக்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டது. மேலும், தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் புகழ் பெற்ற நடிகையாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். எனவே அவரையே நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி நடந்தால் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இணையும் படமாக இந்தப் படம் இருக்கும்.