தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்து வரும் சமந்தா, தனது பர்சனல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்துள்ள சமந்தா, தனது கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி அவருடன் எடுத்துக் கொண்டுள்ள ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதோடு, ஆன்மிகம் குறித்த ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், ஆன்மிகத்தில் முழு முயற்சி என்பது உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து ஒரு மகத்தான அனுபவத்தை உணர்வதே ஆகும். உங்களது அறியாமையின் விளைவாக உங்களை உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்தில் இருந்து உங்களை நீக்கிக் கொண்டு ஒரு நல்ல படைப்பாளியாக உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்வதுதான் ஆன்மிகம். இது முற்றிலும் ஆனந்தமான எல்லையற்ற பொறுப்பு.
அறிவு மட்டுமே சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்தும் வெளிப்புறத் தோற்றத்தை தருகின்றன. ஆனபோதும் நீங்கள் ஒருபோதும் வெளிப்புற தோற்றத்தை அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையிலேயே அறிவொளியை பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம் என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.