பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்து வரும் சமந்தா, தனது பர்சனல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்துள்ள சமந்தா, தனது கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி அவருடன் எடுத்துக் கொண்டுள்ள ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதோடு, ஆன்மிகம் குறித்த ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், ஆன்மிகத்தில் முழு முயற்சி என்பது உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து ஒரு மகத்தான அனுபவத்தை உணர்வதே ஆகும். உங்களது அறியாமையின் விளைவாக உங்களை உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்தில் இருந்து உங்களை நீக்கிக் கொண்டு ஒரு நல்ல படைப்பாளியாக உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்வதுதான் ஆன்மிகம். இது முற்றிலும் ஆனந்தமான எல்லையற்ற பொறுப்பு.
அறிவு மட்டுமே சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்தும் வெளிப்புறத் தோற்றத்தை தருகின்றன. ஆனபோதும் நீங்கள் ஒருபோதும் வெளிப்புற தோற்றத்தை அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையிலேயே அறிவொளியை பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம் என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.