லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமாமோகன் உள்பட பலர் நடித்துள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரின் தொடக்கத்தில் அமைதிப்படை அமாவாசையை நினைவுபடுத்தும் வகையில் கண்களை சிமிட்டியபடி என்ட்ரி கொடுக்கிறார் விஜய் சேதுபதி.
அதையடுத்து அவருக்கும் பார்த்திபனுக்குமிடையே நடக்கும் வார்த்தை போரை வைத்து அவர்கள் இருவருக்குமிடையிலான மறைமுகப்போர்தான் இந்த துக்ளக் தர்பார் என்பது தெரிகிறது. எவனோ ஒருத்தன் கூட இருந்தே என்னை யூஸ் பண்றான். நல்லா வச்சு செய்றான் என்று பார்த்திபனை மறைமுகமாக போட்டுத்தாக்குகிறார் விஜய் சேதுபதி. அதற்கு பார்த்திபன், நமக்கு தெரியாத ஒருத்தன். ஆனால் நம்ம விசயத்தை நன்றாக தெரிந்த ஒருத்தன். யார் அந்த நாலாவது ஆள்? என்று விஜய் சேதுபதியை, அவரிடத்திலேயே கேட்கிறார்.
இறுதியில், எப்படியென்றாலும் நீங்கள் என்னை சும்மா விடமாட்டீங்க. அதனால நானும் உங்களை சும்மா விடுறதா இல்ல. வாங்களேன் நேரடியாக மோதிப்பார்ப்போம் என்று பார்த்திபனை அதிரடியாக ஆக்சனுக்கு விஜய் சேதுபதி அழைக்கும் டயலாக்கும் துக்ளக் தர்பார் டீசரை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இந்த டீசரை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.