கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி என எண்ணற்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, பாண்டிச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதற்கு முன்பு நடைபெற்றது. கொரானோ தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அடிக்கடி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள். இதற்காக படக்குழுவினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்களாம்.
அனைத்து நட்சத்திரங்களும் இன்று ஆரம்பமாகியுள்ள படப்பிடிப்பில் அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளார்களாம். சுமார் ஒரு மாத காலத்திற்கு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடத்திலேயே வெளியாகுமா என்பது முதல் பாகத்திற்கான படப்பிடிப்பை முடித்த பிறகுதான் தெரிய வரும்.